Tuesday, 23 May 2017

குறளமுதம் -36

குறளமுதப்   படையல் -  36.
            🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

அருமைத் தமிழர்க்கெல்லாம்...
நன்னாள்   வாழ்த்துகள்!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

இன்றைய  குறளமுதப்  படையல்:
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அறத்துப்பால்- இல்லறவியல்..
அதி.24- புகழ்.  (இசை அல்லது கீர்த்தி)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

ஈந்து      வாழ்ந்து    எய்தும்    புகழே
என்றும்   இங்கே   ஊதியம்   உயிர்க்கு!

"ஈதல்   இசைபட   வாழ்தல்  அதுவல்லது
 ஊதியம்   இல்லை   உயிர்க்கு. ".            (குஎ: 231)
------

உலகோர்    போற்றும்    உயர்மொழி    யாவும்
இரப்பார்க்கு    ஈந்திடும்   உயர்ந்தோர்   புகழே!

"உரைப்பார்   உரைப்பவை   எல்லாம்
 இரப்பார்க்கொன்று
 ஈவார்மேல்   நிற்கும்   புகழ்."                 ( குஎ: 232)

-------

ஒப்பிலாப்  புகழோடு   உயர்ந்து   நிற்றலே      
எப்போ     துமிங்கே   அழியா    தவொன்றே!

"ஒன்றா   உலகத்து   உயர்ந்த   புகழல்லால்
 பொன்றாது    நிற்பதொன்   றில். "          ( குஎ: 233)

--------

உலகில்    ஒருவர்   உயர்புகழ்    எய்தின்
புலவரும்   அடையார்    புத்தேள்    உலகம்!

"நிலவரை    நீள்புகழ்   ஆற்றின்  புலவரைப்
  போற்றாது    புத்தேள்   உலகு. "              ( குஎ: 234)

---------

நத்தம்      செத்து   முத்தைத்     தந்திடும்,
வித்தகர்    பெறுவர்  செத்தபின்    புகழை!

"நத்தம்போல்  கேடும்    உளதாகும்   சாக்காடும்
  வித்தகர்க்    கல்லால்   அரிது. "               ( குஎ: 235)

-----------

வாழின்    புகழொடு    வாழ்க!    இல்லெனின்
வாழாது    இங்கேயே    வீழ்தல்    நன்று!

"தோன்றின்    புகழொடு   தோன்றுக  அஃதிலார்
  தோன்றலின்  தோன்றாமை   நன்று. "    ( குஎ: 236)

----------

இசைபெற     இயலாதார்   இகழ்வாரை   வசையற்க,
இசைபெற     வாழ்தல்    அவரவர்       கடனே!

"புகழ்பட   வாழாதார்   தந்நோவார்    தம்மை
   இகழ்வாரை    நோவது   எவன்? "             ( குஎ: 237)

-----------

இசையெனும்    புகழையெய்     தாதான்     வாழ்க்கை
வசையாம்     வையத்து     மாந்தர்க்கு    எல்லாம்!

"வசையென்ப  வையத்தார்க்  கெல்லாம்
  இசையென்னும்
  எச்சம்    பெறாஅ    விடின். ".                  ( குஎ: 238)

-------------

புகழெனும்    மாண்பைப்   பெறாத   மாந்தரைப்
பொறுத்த     நிலமும்     பழிச்சொல்    பெறுமே!

"வசையிலா  வண்பயன்   குன்றும்   இசையிலா
  யாக்கை   பொறுத்த   நிலம்."               ( குஎ: 239)

----------

வன்சொல்   நீங்க   வாழ்வாரே    வாழ்வார்,
இன்சொல்   நீங்கி   இயங்குவார்    உயிரிலார்!

"வசையொழிய  வாழ்வாரே வாழ்வார்  இசையொழிய
  வாழ்வாரே    வாழா    தவர்."                 ? குஎ: (240)

----------
நன்று நண்பர்களே!
நாம் பிறப்பது முதல்
இறக்கும்  வரையிலும்
நம் உடலுடன்
இணைந்து வாழும்
நம்  உயிருக்கு
நாம் இவ்வுலகில்
சேர்த்து வைக்கும்
ஒரே ஊதியம் ( வரவு)
புகழ்  மட்டுமே!
புகழைத் தவிர்த்து
வேறொன்றுமே இல்லை!

வாழ்க தமிழ்!
வெல்க  தமிழினம்!!

அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்.

◀▶.   ◀▶.   ◀▶.   ◀▶.    ◀▶.   ◀▶